இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
நடிகை த்ரிஷா பற்றி பேட்டி ஒன்றில் ஆபாசமாகப் பேசிய நடிகர் மன்சூரலிகானுக்கு பல சினிமா பிரபலங்கள் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். தெலுங்குத் திரையுலகின் சீனியர் ஹீரோவான சிரஞ்சீவி கூட நேற்று அவரது கண்டனத்தைத் தெரிவித்திருந்தார். தெலுங்கு ஹீரோவான அவரே தெரிவித்த பின்பும் இங்குள்ள தமிழ் ஹீரோக்கள் அது பற்றி எதுவும் சொல்லாமல் மவுனமாக இருக்கிறார்கள்.
'லியோ' படத்தின் கதாநாயகனாக விஜய், மற்ற முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித் ஆகியோரும் இதுவரை தங்களது கண்டனங்களைப் பதிவு செய்யவில்லை. இவர்கள் அனைவருடனும் த்ரிஷா இணைந்து நடித்தவர் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.
நடிகர் சங்கம் இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை விட்டுவிட்டதால் முன்னணி நடிகர்கள் அனைவரும் இந்த விவகாரத்தில் சிக்குவதைத் தவிர்க்கிறார்களா என்றும் தெரியவில்லை. நேற்று மன்சூரலிகான் அளித்த பேட்டியில் கூட நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், செயலாளர் விஷால் ஆகியோர் எனது தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை என்றே தெரிவித்திருந்தார்.
தேசிய மகளிர் ஆணைய உத்தரவுப்படி தமிழக போலீசார் வழக்குப் பதிவு செய்த பின்பும் தமிழின் முன்னணி நடிகர்கள் எதுவும் பேசாமல் இருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.