36 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்திற்கு 'ஏ' சான்றிதழ் | இரண்டாவது முறை தேசிய விருது பெறும் ஊர்வசி | தேசிய விருது வென்றவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து | வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் |
கல்யாண் இயக்கத்தில், சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள படம் '80ஸ் பில்டப்'. இப்படம் அடுத்த வாரம் நவம்பர் 24ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய படத்தின் தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா படத்திற்காக சந்தானத்திற்கு எவ்வளவு சம்பளம் கொடுத்தேன் என்பதை வெளிப்படையாக அறிவித்தார். அது மட்டுமல்ல அவரது தயாரிப்பில் முதன் முதலில் நடித்ததிலிருந்து இப்போது வரை கொடுத்த சம்பளங்களையும் பட்டியலிட்டார்.
“சில்லுனு ஒரு காதல்' படத்துல சந்தானம் சாருக்கு ஒண்ணே முக்கால் லட்சம் சம்பளம் கொடுத்திருக்கேன். அப்புறம் 18 லட்சம் கொடுத்திருக்கேன், 56 லட்சம் கொடுத்திருக்கேன், 1 கோடியே 25 லட்ச கொடுத்திருக்கேன். இப்ப 3 கோடி கொடுத்திருக்கேன். இன்னும் நான் 30 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கிற அளவுக்கு சந்தானம் பிரதருக்கு வளர்ச்சி வரணும். அதையும் தாண்டி அவருடைய பயணத்துல நானும் போகணும்னு ஆண்டவனை வேண்டிக்கிறேன்,” என்றார்.