இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
இந்திய வம்சாவளியை சேர்ந்த சன்னி லியோன் கனடா நாட்டில் 'பார்ன் ஸ்டாராக' இருந்தார். பின்னர் இந்தி 'பிக் பாஸ்' நிகழ்ச்சி மூலம் இந்தியாவுக்கு வந்த அவர் தற்போது பாலிவுட் நடிகையாக மாறிவிட்டார். தமிழில் வடகறி, மதுரராஜா படங்களில் நடனம் ஆடினார் 'ஓ மை கோஸ்ட்' படத்தில் நடித்தார். தற்போது இவர் நடித்துள்ள 'கொட்டேஷன் கேங்' என்ற படம் வெளிவர இருக்கிறது.
இந்த நிலையில் காசிக்கு சென்ற சன்னி லியோன் அங்கு பயபக்தியுடன் கங்கா ஆரத்தியை தரிசித்தார். கழுத்தில் மாலை, நெற்றியில் சந்தனம் தரித்து தீபம் ஏந்தி வழிபட்டார். சன்னி லியோன் காசி வந்திருக்கும் தகவல் அறிந்து ரசிகர்கள் அவரை தேடினார்கள். ஒரு கட்டத்தில் அவரை கண்டுபிடித்து கூட்டம் அதிகமாகவே அங்கிருந்து அவசரமாக கிளம்பிச் சென்றார் சன்னி லியோன்.