ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
நடிகர் துல்கர் சல்மானை பொறுத்தவரை தென்னிந்தியாவையும் தாண்டி பாலிவுட் வரை பிரபலமாகி பான் இந்தியா நடிகராக மாறிவிட்டார். அதனால் ஒவ்வொரு மொழியிலும் ஒரு படம் என்கிற கணக்கில் தற்போது மாறி மாறி நடித்து வருகிறார். சமீபத்தில் இத்தாலி நகரத்திற்கு சுற்றுலா சென்ற துல்கர் சல்மான் அங்கே உள்ள தெரு ஒன்றில் ஒரு காரின் முன்பாக நின்று தன்னை புகைப்படம் எடுக்கும் ஒரு குட்டி குழந்தைக்கு கியூட்டாக போஸ் கொடுத்து அந்த குழந்தையை ஒரு போட்டோகிராபராகவே மாற்றிவிட்டார். இந்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியாவிலும் பகிர்ந்துள்ள துல்கர் சல்மான், “நீ சரியான ஆள் தான் என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன்” என்று அந்த குழந்தையை பாராட்டி உள்ளார். இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.