மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை தானும் ஒரு ஹீரோ என்கிற அளவில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து படங்களில் நடித்து வந்தார் எஸ்ஜே சூர்யா. ஆனால் மாநாடு படத்தில் வில்லனாக அவர் நடித்ததை தொடர்ந்து ரசிகர்களிடம் அவருக்கான வரவேற்பு பலமடங்கு உயர்ந்தது. தொடர்ந்து டான், மார்க் ஆண்டனி சமீபத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என தான் நடிக்கும் படங்களில் எல்லாம் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை தொடர்ந்து கவர்ந்து வருகிறார்.
தமிழை தாண்டி ஏற்கனவே தெலுங்கில் நுழைந்து படங்களில் நடித்து வரும் எஸ்ஜே சூர்யா தற்போது முதன்முறையாக மலையாள திரையுலகிலும் அடியெடுத்து வைக்க இருக்கிறார். மலையாளத்தில் சுரேஷ் கோபி நடிப்பில் உருவாகி வரும் அவரது 251வது படத்தில் வில்லனாக எஸ்.ஜே சூர்யா நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. ஜீபூம்பா என்கிற படத்தை இயக்கிய ராகுல் ராமச்சந்திரன் என்பவர் இந்தப் படத்தை இயக்குகிறார்.