லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‛கைதி -2' படத்தில் நடிக்கவில்லை! -அனுஷ்கா மறுப்பு | திரில்லர் கதையை படமாக்கும் பிரேம்குமார்! பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்!! | கமலின் 237வது படம் டிராப் ஆகிவிட்டதா? | சண்முக பாண்டியன் நடித்துள்ள ‛படை தலைவன்' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | ஸ்ரீ லீலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து சுதா கொங்கரா வெளியிட்ட வீடியோ! | எம்.பி.,யான கமல்ஹாசன்; சினிமா வளர்ச்சிக்காக குரல் கொடுப்பாரா? | நல்ல கதைக்காக காத்திருக்கும் ஜோதிகா | அடுத்த படத்துல ஹீரோயின் உண்டா? சண்முக பாண்டியன் பதில் | ஜனநாயகன் பட இசை வெளியீட்டு விழா நடக்குமா? | விஜய் மில்டன் இயக்கத்தில் இரண்டாம் முறையாக இணைந்த அம்மு அபிராமி! |
சினிமாவில் அவ்வப்போது பரிசோதனை முயற்சிகள் நடக்கும். ஒரே ஷாட்டில் உருவாகும் படம், ஒருவர் மட்டுமே நடிக்கும் படம், வசனம் இல்லாத படம் இப்படி ஏராளமான சாதனை படங்கள் வந்திருகின்றன. கடைசியாக செல்போனில் தயாரான படம் கூட வந்திருக்கிறது. இந்த நிலையில் கன்னட நடிகர் உபேந்தராவின் மனைவி பிரியங்கா சிசிடிவி கேமரா மூலம் உருவாகும் 'கேப்ச்சர்' என்ற படத்தை தயாரித்து, நடிக்கிறார்.
அலுவலகங்கள், சாலைகள், வீடுகளில் கண்காணிப்பு கேமரா தற்போது பொருத்தப்படுகிறது. இந்த கேமராவில் பதிவான காட்சிகளை திரைக்கதையாக்கி இந்த படம் தயாராகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் உலகிலேயே ஒரே லென்ஸை மட்டுமே பயன்படுத்தி படமாக்கப்பட்ட படமும் இதுதான் என்கிறார்கள்.
லோஹித்.ஹெச் இந்தப்படத்தை இயக்குவதன் மூலம் மம்மி மற்றும் தேவகி ஆகிய படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக பிரியங்காவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி புரடக்ஷன்ஸ் சார்பில் ரவி ராஜ், ஷாமிகா எண்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தப்படத்தை தயாரித்துள்ளார்.
இந்தப்படம் முழுவதும் கோவாவில் 30 நாட்களில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாகும் விதமாக தயாராகி வருகிறது. சிவராஜ்குமாரின் 'டகரு' படத்தின் மூலம் புகழ்பெற்ற மன்விதா காமத், மாஸ்டர் கிருஷ்ணராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்கள். பாண்டிக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.