ரஜினியின் அடுத்த படத்தை தயாரிப்பது யார்? | இப்படியெல்லாம் ஐடியா கொடுப்பது யாரு? | 2025 தீபாவளி : 3 இளம் ஹீரோக்களின் போட்டி | சல்மான் கான் கமெண்ட்டுக்கு பதிலளிப்பாரா ஏஆர் முருகதாஸ் ? | காதலரைக் கரம் பிடிக்க 15 வருடங்கள் காத்திருந்த கீர்த்தி சுரேஷ் | தமிழ் இயக்குனர்களைக் கவர்ந்த நாகார்ஜுனா 'ஹேர்ஸ்டைல்' | ஓடிடியில் நேரடி படங்கள், வெப் தொடர்கள் அறிவிப்பு | நடிப்பில் விக்ரமை வெல்ல தொடர்ந்து போராடுவேன்: துருவ் விக்ரம் | அம்மாவின் பச்சை நிற கண்ணை பெற்ற அழகான மகள்: அக்ஷராவுக்கு கமல் பிறந்த நாள் வாழ்த்து | பிளாஷ்பேக்: கதை நாயகனாக முதல் படத்தில் தோற்ற எஸ்.எஸ்.ராஜேந்திரன் |
ரஜினியின் கேரியரில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் அவர் நடித்த பாட்ஷா முக்கியமான படம். இந்த படம் ரஜினி ரசிகர்களுக்கு மட்டுமின்றி ரஜினிக்கும் தான் நடித்ததில் மிகவும் பிடித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. கேங்ஸ்டர் கதையில் உருவான இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு ரஜினியை சுரேஷ் கிருஷ்ணா தொடர்பு கொண்ட போது, ஒரு பாட்ஷாவே போதும், இரண்டாம் பாகம் வேண்டாம் என்று சொல்லி நடிப்பதற்கு மறுத்து விட்டார்.
இந்த நிலையில் பாட்ஷா படத்தை ரீமேக் செய்ய திட்டமிட்டு வருகிறார் சுரேஷ் கிருஷ்ணா. அந்த படத்தில் ஹீரோவாக விஜய்- அஜித் இருவரில் ஒருவரை நடிக்க வைக்க அவர் திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் சமீபத்தில் பாட்ஷா ரீமேக்கில் நடிக்கப் போவது விஜய்யா? அஜித்தா? என்று அவரிடத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, ரஜினியின் பில்லா என்ற கேங்ஸ்டர் படத்தில் நடித்தார் அஜித்குமார். அந்த ரீமேக் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. அதனால் பாட்ஷாவாக நடிப்பதற்கும் அவர்தான் பொருத்தமாக இருப்பார் என்று கூறியுள்ளார். அதனால் ரஜினியின் பில்லாவை தொடர்ந்து பாட்ஷா படத்தின் ரீமேக்கிலும் அஜித்குமாரே நடிப்பார் என்பது தெரியவந்துள்ளது.