தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் |
பிக்பாஸ் சீசன் 7ல் பிரதீப் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட விவகாரத்தில் பல வகையான கருத்து மோதல்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கமல்ஹாசன் இதுகுறித்து பேசிய போது ‛முந்தைய சீசன்களில் சிலர் வென்றார்கள் என்பதற்காக அதே போன்ற விளையாட்டை இப்போது விளையாடினால் இப்போதும் மக்கள் ஆதரிப்பார்கள் என நினைக்கக் கூடாது. அன்று ஏன் ஓட்டு போட்டார்கள் என்று அவர்களுக்கே தெரியாது என நினைக்கிறேன்' என்று கூறியிருந்தார்.
இதில் கமல்ஹாசன் அசீமை தான் அப்படி பேசியிருக்கிறார் என புதுவிவாதம் இணையதளங்களில் எழுந்து வரும் நிலையில், இதுகுறித்து தற்போது பேட்டியளித்துள்ள அசீம், 'பிக்பாஸில் நான் எந்த தவறான வார்த்தையும் பேசவில்லை. வாடி போடி என்று சொன்னேன். அதற்கும் மன்னிப்பு கேட்டுவிட்டேன். இந்த சீசனில் சிலர் கெட்ட வார்த்தை பேசி வருகிறார்கள். எனக்கு பட்டத்தை விஜய் டிவியோ கமல் சாரோ கொடுக்கவில்லை. மக்கள் தான் எனக்கு ஓட்டுபோட்டு பட்டத்தை ஜெயிக்க வைத்தார்கள். அப்படி என் வெற்றியை கமல் சாரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால் அவர் மக்கள் போட்ட ஓட்டுகளை உதாசீனப்படுத்துவதாக அர்த்தம்' என்று ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.