காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தள்ளிவைப்பா... : ரிஷப் ஷெட்டி பதில் | குத்துப்பாடலில் சர்ச்சையான வரிகளை நீக்க சொன்ன பவன் கல்யாண் ; மரகதமணி தகவல் | பண மோசடி வழக்கில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' தயாரிப்பாளர்களின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்த தீபிகா படுகோனே : வெளியேறவில்லை.. வெளியேற்றப்பட்டார் | போலீஸ் பாதுகாப்பை மீறி சல்மான் கான் வீட்டுக்கு செல்ல முயன்ற பெண் கைது | மைசூர் சாண்டல் சோப் தூதராக தமன்னா நியமனம் : வலுக்கும் எதிர்ப்பு | ரவி மோகன், ஆர்த்திக்கு கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு | 24 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ரவீனா டாண்டன் | முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ஏஆர் ரஹ்மான் | நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு |
'பாரதி கண்ணம்மா' தொடர் மூலம் புகழ் பெற்றவர் வினுஷா. இந்த தொடர் முடிந்த உடனேயே அவருக்கு 'பிக் பாஸ்' வாய்ப்பு கிடைத்தது. டைட்டில் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். 'பிக் பாஸ்' வீட்டிற்குள் தான் அவமானப்படுத்தப்பட்டதாக தற்போது கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு நான் விரும்பித்தான் சென்றேன். ஆனால் நினைத்து சென்றது வேறு, நடந்தது வேறு. உடன் இருந்தவர்கள் நடந்து கொண்ட விதம் என்னை காயப்படுத்தியது. எனக்கு முன்னால் கேலி கிண்டல் செய்தவர்களை விட பின்னால் செய்தவர்கள் அதிகம். குழுவாக பிரிந்து சண்டையிட்டுக் கொள்வது சகஜமானது. ஆனால் இந்த முறை தனிப்பட்ட முறையில் விமர்சித்தார்கள். கன்டென்ட் வேண்டும் என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்கிறார்கள்.
பலரும் என்னை மட்டம் தட்டி எனக்குப் பின்னால் பேசியதால் உண்மையில் நான் மன அழுத்தத்திற்கு ஆளாகி விட்டேன். அதனால் அமைதியாகி விட்டேன். பிக்பாஸ் என்ற விளையாட்டையும் தாண்டி என்னுடைய மனநலன் முக்கியம் என்று நினைத்தேன். ஆனாலும், அந்த விளையாட்டில் என் முழு திறமையைக் காட்ட முடியாமல் போனது வருத்தம்தான். தற்போது வெளியில் வந்ததும் நிம்மதியை உணர்கிறேன். என்கிறார் வினுஷா.