மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
இயக்குனர் விஜய் இயக்கிய மதராசப்பட்டினம் படத்தில் அறிமுகமானவர் நடிகை எமி ஜாக்சன். அதைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் ஐ படத்தில் விக்ரம் ஜோடியாக, 2.O படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் அளவுக்கு முன்னணி நடிகையாகவும் உயர்ந்தார். பின்னர் தனுஷ், உதயநிதி ஆகியோருடன் ஒருசில படங்களில் நடித்த எமி ஜாக்சன், ஒரு கட்டத்தில் நடிப்பை விட்டு ஒதுங்கி திருமணமாகி லண்டனில் செட்டில் ஆனார். இந்த நிலையில் மீண்டும் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் விஜய் இயக்கி வரும் அச்சம் என்பது இல்லையே படத்திலேயே ரீ-என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார் எமி ஜாக்சன்.
தனது முதல் கணவரை விட்டு பிரிந்து தற்போதைய புதிய பாய் பிரண்டுடன் உற்சாகமாக பொழுதுபோக்கி வரும் எமி ஜாக்சன் அவ்வப்போது தனது மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வீடியோக்களையும் சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு விவசாய நிலத்தில் பூசணிக்காயை பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள எமி ஜாக்சன் அவற்றை தள்ளுவண்டியில் சேகரிக்கும்போது தனது மகனையும் சேர்த்து உட்கார வைத்து தள்ளிவருவது போன்று சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.