ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு | நேருக்கு நேர் மோதும் சந்தானம், சூரி படங்கள்! | தமிழ் மொழிக்கான பெருமைச்சின்னம்: ஏ.ஆர்.ரஹ்மான் அறிவிப்பு | கிரிக்கெட் வீரரின் பயோபிக் படத்தை இயக்கும் பா.ரஞ்சித்! | காரில் வெடிகுண்டு வைத்து தகர்ப்போம்! சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல்! | புதிய வருடம் புதிய லைப் - ‛தக்லைப்' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாகிறது! | மாரியம்மன் கோவில் விழாவில் பாட்டு பாடி நடனமாடிய ரம்யா நம்பீசன்! | பிளாஷ்பேக்: கதையால் ஈர்க்கப்பட்டு “காவியத் தலைவி”யான நடிகை சவுகார் ஜானகி | சிம்பு 49வது படத்தில் இணைந்த சாய் அபியன்கர்! | தனுஷ், விக்னேஷ் ராஜா படம் கைவிடப்பட்டதா? |
விஜய்யின் லியோ படத்தின் வெற்றி விழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவில் படத்தின் நாயகி த்ரிஷா பேசியதாவது : ‛‛லியோ படத்தின் கதையை 2 ஆண்டுகளுக்கு முன்பே லோகேஷ் கனகராஜ் சொன்னார். இரண்டரை மணி நேரம் அவர் சொன்ன கதை எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அப்போது அந்த கதையை எப்படி சொன்னாரோ அதையேதான் இப்போதும் எடுத்தார்.
விஜய்யோடு நான் நடித்தது மறக்க முடியாத அனுபவம். பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள் பல ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்தால் எப்படி இருக்குமோ அப்படித்தான் உணர்ந்தேன். எனது கேரியரில் நான் அதிகம் பயணப்பட்டது விஜய்யோடு தான். அவரது அமைதிதான் அவரது வெற்றிக்கு காரணம்.
என்னை சந்திப்பவர்கள், சமூக வலைத்தளங்களில் என்னோடு தொடர்பில் இருப்பவர்கள் விஜய்யுடன் எப்போது மீண்டும் நடிப்பீர்கள் என்று கேட்டு கொண்டே இருந்தனர். இப்போது 10 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் நடித்திருக்கிறோம். அதுவும் ஒர் அவுட் ஆகியிருக்கு. நடிகைகளுக்கு அப் அண்ட் டவுன் இருக்கும். எல்லா நேரத்திலும் சந்தோஷமாக இருக்க வேண்டும். நான் அப்படி இருப்பது தான் நிலைத்து நிற்பதற்கும் காரணம்,'' என்றார்.