ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
மலையாள திரை உலகில் கடந்த 15 வருடங்களாக குணச்சித்திர நடிகையாக நடித்து வருபவர் லேனா. இவர் தமிழில் தனுஷின் அனேகன் மற்றும் திரவுபதி ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் தனது பேட்டிகளில் பல விஷயங்களை தத்துவார்த்தமாக பேசுவார் லேனா. அவ்வளவு ஏன், தான் விவாகரத்திற்கு விண்ணப்பித்து அதற்கான நீதிமன்ற தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது யாரை விவாகரத்து செய்ய நினைத்தாரோ அவருடனேயே அமர்ந்து குலோப் ஜாமூன் சாப்பிடும் அளவிற்கு வாழ்க்கையை ரொம்ப எளிதாக எடுத்துக் கொள்பவர்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் தான் முற்பிறவியில் திபெத் அருகே உள்ள பகுதியில் ஒரு புத்த துறவியாக இருந்ததாக கூறி அதிர வைத்துள்ளார். அதன் தூண்டுதல் காரணமாகவே கடந்த சில வருடங்களுக்கு முன்பு தான் மொட்டை அடித்துக் கொண்டதாகவும் கூறியுள்ள லேனா, அடுத்து சொன்னது தான் இன்னும் அதிர்ச்சியான விஷயம். நடிகர் மோகன்லாலுடன் தனக்கு ஒரு ஆன்மிகத் தொடர்பு இருந்து வருவதாகவும் அவரை தனது ஆன்மிக குருவாக கருதுவதாகவும் கூறியுள்ளார் லேனா.