கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா |
நடிகர் லிவிங்ஸ்டன் 90களில் வில்லனாக அறிமுகமாகி அதன்பிறகு கதாநாயகனாக, குணசித்திர நடிகராக என தனது திரையுலக பயணத்தை தொடர்ந்து வருகிறார். தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளார் லிவிங்ஸ்டன். இந்த படத்தில் மொய்தீன் பாய் என்கிற சிறப்பு தோற்றத்தில் ரஜினியும் நடித்துள்ளார். இதற்கு முன்னதாக 90களில் வீரா படத்தில் ரஜினியுடன் நடித்த லிவிங்ஸ்டன், அதன்பிறகு சிவாஜி, பின்னர் அண்ணாத்த ஆகிய படங்களில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ளார்.
இந்த நிலையில் ரஜினிகாந்தை அவரது வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்துள்ளார் லிவிங்ஸ்டன். பொதுவாக ரஜினிகாந்தின் நட்பு வட்டாரத்தில் உள்ள நடிகர்கள் அல்லது அவரது படங்களின் உடன் நடிக்கும் வாய்ப்பை பெற்ற நடிகர்கள் மரியாதை நிமித்தமாக அவரிடம் நேரம் கேட்டு அவரது வீட்டிற்கு சென்று சந்திப்பது உண்டு. ஆனால் நடிகர் லிவிங்ஸ்டனை ரஜினியே தனது கடந்த வீட்டிற்கு வருமாறு அழைப்பு விடுத்து அவரை வரவேற்று உபசரித்துள்ளார். இது குறித்த புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் ஜோவிடா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், “இந்த நாள் என் வாழ்க்கையில் நினைவில் வைத்து பாதுகாக்கும் ஒரு மறக்க முடியாத நாள். ஆம்.. சூப்பர் ஸ்டாரே என் தந்தையை அவரது வீட்டிற்கு அழைத்திருந்தார். அப்பாவுக்கும் சூப்பர் ஸ்டாருக்கும் இருக்கும் நெருக்கம் பற்றி எனக்கு ஏற்கனவே தெரியும். இன்று எனக்கு படப்பிடிப்பு இல்லாமல் இருந்திருந்தால் எப்படியாவது என் தந்தையிடம் கெஞ்சி, நானும் அவரை சந்திக்க வருகிறேன் என கிளம்பி இருப்பேன். ரஜினி சாரின் மீதான அன்பு நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. ஒரு நாள் விரைவில் அவரை சந்திப்பேன்” என்று கூறியுள்ளார்.