அஜ்மல் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு | இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் |
தெலுங்குத் திரையுலகின் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜுன். அவர் நடித்து வெளிவந்த 'புஷ்பா' படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நேற்று டில்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றார்.
அதே போல, அதே படத்திற்காக சிறந்த பாடல்களுக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத் பெற்றார். அல்லு அர்ஜுன், தேவிஸ்ரீபிரசாத் இருவரும் சென்னையில் பிறந்து வளர்ந்தவர்கள். அல்லு அர்ஜுன் ஐதராபாத்தில் தற்போது வசிக்க, தேவிஸ்ரீபிரசாத் சென்னையில்தான் இன்னமும் வசித்து வருகிறார்.
நேற்று தேசிய விருது பெற்ற பிறகு தேவிஸ்ரீபிரசாத்துடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடும் புகைப்படங்களைப் பகிர்ந்து அல்லு அர்ஜுன், “எனது பால்ய நண்பர், எனது இசையமைப்பாளர், எனது நலம் விரும்பி, எனது உற்சாகத் தலைவருடன் சேர்ந்து பெற்றது மறக்க முடியாத நிகழ்வு. முதல் முறையாக இருவரும் ஒன்றாக சேர்ந்து பெற்றது மிக்க மகிழ்ச்சி. சென்னை சாலைகளிலிருந்து, டில்லி அரங்கு வரை… இது ஒரு 25 வருடப் பயணம்,” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.