தாதா சாகேப் பால்கே விருது பெற்றார் மோகன்லால் : கனவிலும் நினைக்கவில்லை என நெகிழ்ச்சி | தேசிய விருது பெற்றனர் ஷாரூக்கான், ராணி முகர்ஜி, எம்எஸ் பாஸ்கர், ஜிவி பிரகாஷ், ஊர்வசி | இட்லி கடை படத்திற்கு தணிக்கை குழு ‛யு' சான்றிதழ் | 100 கோடி லாபத்தில் 'லோகா' | ஹிந்தியில் அறிமுகமாகும் அர்ஜுன் தாஸ் | சர்தார் 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் | துருவ் விக்ரமுக்கு வாழ்த்து சொன்ன அனுபமா பரமேஸ்வரன் | மீண்டும் படம் இயக்கும் தம்பி ராமையா மகன் உமாபதி | தாய்மையை அறிவித்த கத்ரினா கைப் | 'காந்தா சாப்டர் 1 டிரைலர்' : கன்னடத்தை விட ஹிந்தியில் அதிக வரவேற்பு |
விஜய் நடித்துள்ள 'லியோ' படத்திற்கு அக்டோபர் 19 முதல் 24 வரை தினமும் 5 காட்சிகளை நடத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியது. அதன்படி காலை 9 மணி முதல் இரவு 1.30 மணி வரை காட்சிகளை நடத்தி அனுமதி வழங்கப்பட்டது. அதற்கான முன்பதிவுகள் தற்போது ஆரம்பமாகி நடந்து வருகின்றன.
இந்நிலையில் இப்படத்திற்காக அதிகாலை 4 மணி காட்சிக்கே அனுமதி தர வேண்டும் என்று திரையுலகத்திலிருந்தும் குரல்கள் எழுந்தன. இருப்பினும் அது குறித்து அரசு தரப்பிலிருந்து எந்த ஒரு பதிலும் தரப்படவில்லை.
இதையடுத்து அதிகாலை 4 மணி காட்சி மற்றும் 7 மணி காட்சி வேண்டுமென தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதியம் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளபடுவதாக இருந்தது. ஆனால் நாளை(அக்., 17) காலை முதல் வழக்காக விசாரிக்கப்படும் என நீதிபதி அனிதா சுமந்த் அறிவித்துள்ளார்.
தயாரிப்பாளரின் கோரிக்கை ஏற்கப்படுமா அல்லது அரசு தரப்பில் அதிகாலை 4 மணி காட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.
இந்த வருட பொங்கலுக்கு அஜித் நடித்த 'துணிவு' அதிகாலை காட்சிகளின் கொண்டாட்டத்தின் போது சென்னையில் ரசிகர் ஒருவர் மரணமடைந்தார். அதன்பிறகே அதிகாலை காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. அதையெல்லாம் யோசிக்காமல் தயாரிப்பு தரப்பில் விடாப்பிடியாக வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.