நஷ்டஈடு கேட்டு இளையராஜா நோட்டீஸ்: 'குட் பேட் அக்லி' தயாரிப்பாளர் விளக்கம் | ஓடிடி.,யிலும் தோல்வியடைந்த யுவன் ஷங்கர் ராஜா படம் | ஓடிடி-யில் வெளியாகும் வரலக்ஷ்மி சரத்குமாரின் திரில்லர் படம் | கூலி படத்தில் ரஜினி உடன் நடித்தது ஸ்பெஷலான அனுபவம் : பூஜா ஹெக்டே | அரசியலுக்கு வர வாய்ப்புள்ளதா? : ரவி மோகன் கொடுத்த பதில் | விஜய் சேதுபதி படத்தில் ராதிகா ஆப்தே? | பாங்காக் பறந்த இட்லி கடை படக்குழு | 24 லட்சம் வாடகையில் புதிய அபார்ட்மென்ட்டுக்கு குடிபெயர்ந்த ஷாருக்கான் | உடை மாற்ற உதவிக்கு வருவேன் என அடம்பிடித்த போதை நடிகர் : மலையாள நடிகை அதிர்ச்சி தகவல் | ஜெய ஜெய ஜெய ஜெய ஹே ஹிந்தி ரீமேக்கை அமீர்கான் கைவிட்டது ஏன்? : நடிகர் புது தகவல் |
நடிகர் ரகுமான் திரையுலகில் நுழைந்து இன்னும் சில தினங்களில் 40 வருடங்களை தொடப் போகிறார். என்றும் மார்க்கண்டேயன் என்று இவரையும் சொல்லலாம் என்கிற விதமாக முப்பது வருடங்களுக்கு முன்பு புதுப்புது அர்த்தங்கள் படத்தில் பார்த்தது போலவே இன்னும் இளமை துடிப்புடன் பல படங்களில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார் ரகுமான்.
அந்த வகையில் தற்போது முதன் முதலாக பாலிவுட்டில் நுழைந்துள்ளதுடன் அமிதாப்பச்சனின் மகனாகவும் கண்பத் என்கிற படத்தில் நடித்துள்ளார் ரகுமான். இந்த படம் வரும் அக்டோபர் 20ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் அவர் மார்சியல் ஆர்ட்ஸ் கோச் ஆக நடிக்கிறார்.
தமிழில் அவர் ‛நிறங்கள் மூன்று, அஞ்சாமை' ஆகிய படங்களில் நடித்து முடித்து விட்டார். இதில், நீட் தேர்வுக்கு எதிரான கருத்துக்களுடன் உருவாகியுள்ள அஞ்சாமை படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாகவும், வழக்கறிஞராகவும் என இரண்டு வித கதாபாத்திரங்களில் அதே சமயம் டபுள் ஆக்சன் ரோலாக இல்லாமல் ஒரே ஆளாக நடித்துள்ளார். நீட் தேர்வு விஷயத்தில் நீதியை நிலை நாட்டுவதற்கு தனது காக்கி யூனிபார்ம் தடையாக இருக்கிறது என்பதால் அந்த வேலையை ராஜினமா செய்துவிட்டு கருப்பு கவுன் மாட்டிக்கொண்டு வழக்கறிஞராக சட்டத்துடன் போராடும் இரு வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் நடிகர் ரகுமான்.