பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது | இயக்குனர் கே.பாலசந்தர் பற்றி அவதூறு : பாடகி சுசித்ராவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம் |
மாஜி ஹீரோயினான அம்பிகா, அஜித் நடித்த உயிரோடு உயிராக, அமர்க்களம் போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், அமர்க்களம் படத்தில் நடித்து வந்த போது அஜித் செய்த ஒரு உதவி குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், ‛‛அமர்க்களம் படத்தில் நாங்கள் நடித்துக் கொண்டிருந்த போது ஒரு குழந்தைக்கு அறுவை சிகிச்சைக்கு பணம் தேவைப்படுகிறது என்ற ஒரு தகவலை செய்தித்தாள் மூலம் பார்த்தார் அஜித். உடனடியாக அது குறித்து விசாரித்தவர் தனது அலுவலகத்திற்கு போன் செய்து ஒரு குறிப்பிட்ட தொகையை சொல்லி, இதை உடனடியாக அந்த மருத்துவமனைக்கு கொண்டு கொடுங்கள் என்று உத்தரவு போட்டார்.
இப்படி தன்னிடத்தில் நேரில் வந்து உதவி கேட்க வராமலேயே செய்தித்தாளில் வந்த ஒரு தகவலை பார்த்து அது குறித்து விசாரித்து தாமாக தேடிச் சென்று உதவி செய்யக் கூடியவர்தான் அஜித்குமார். இது போன்ற நல்ல உள்ளம் கொண்ட மனிதர்களை பார்ப்பது மிகவும் அரிது'' என்று கூறியுள்ளார் நடிகை அம்பிகா.