‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
விஷால் நடித்த மார்க் ஆண்டனி படம் திரைக்கு வந்ததை அடுத்து தற்போது ஹரி இயக்கும் தனது 34 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்றதை அடுத்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடக்கிறது. இதில் காமெடியனாக யோகி பாபு நடித்து வருகிறார். இந்த நிலையில் படப்பிடிப்புக்கு சென்ற இடத்தில் விஷாலுக்கு ஒரு முருகன் சிலையை பரிசாக கொடுத்திருக்கிறார் யோகி பாபு. அதை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் விஷால்.
அதோடு, காரைக்குடியில் காரில் சென்றபோது, ஒரு கடையில் முருகன் சிலையை பார்த்த யோகி பாபு, உடனே அதை வாங்கி எனக்கு பரிசாக கொடுத்தார். இது ஒரு மறக்க முடியாத பரிசு. ஐ லவ் யூ, நன்றி, கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என்று பதிவிட்டுள்ளார் விஷால். ஆக்ஷன் கலந்த சென்டிமெண்ட் கதையில் உருவாகி வரும் இந்த விஷால் 34வது படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரவுள்ளது.