ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
விஜய், த்ரிஷா மற்றும் பலர் நடித்துள்ள 'லியோ' படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்காக அக்டோபர் 19 முதல் 24ம் தேதி வரை தினசரி 5 காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
அரசு ஆணையை சரியாக புரிந்து கொள்ளாத பல ரசிகர்கள் வேண்டுமென்றே அதிகாலை 4 மணிக்கே சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி என பொய்யான தகவலை சமூக வலைத்தளங்களில் பரப்பினர். நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் காலை 9 மணி முதல் காட்சிகளை நடத்திக் கொள்ளலாம் என்று கூறியிருந்தார்.
ஆனால், கோவை உள்ளிட்ட சில நகரங்களில் உள்ள தியேட்டர்களில் காலை 8 மணிக்கே சிறப்புக் காட்சிகளுக்கான முன்பதிவை ஆரம்பித்துள்ளனர். படம் வெளியாகும் நாளைத் தவிர்த்து விட்டு அக்டோபர் 20 முதல் சில தியேட்டர்களில் முன்பதிவை நடத்தி வருகின்றனர்.
9 மணி முதல் காட்சிகளை நடத்தலாம் என அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில் 8 மணி முதல் எப்படி காட்சிகளை நடத்த உள்ளனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், படம் வெளியாகும் நாளில் அதிகாலை சிறப்புக் காட்சிகளை நடத்தத் தயாரிப்பு நிறுவனம் ‛விடாமுயற்சி' செய்து வருவதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.