சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் |
விஜய், த்ரிஷா மற்றும் பலர் நடித்துள்ள 'லியோ' படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்காக அக்டோபர் 19 முதல் 24ம் தேதி வரை தினசரி 5 காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
அரசு ஆணையை சரியாக புரிந்து கொள்ளாத பல ரசிகர்கள் வேண்டுமென்றே அதிகாலை 4 மணிக்கே சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி என பொய்யான தகவலை சமூக வலைத்தளங்களில் பரப்பினர். நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் காலை 9 மணி முதல் காட்சிகளை நடத்திக் கொள்ளலாம் என்று கூறியிருந்தார்.
ஆனால், கோவை உள்ளிட்ட சில நகரங்களில் உள்ள தியேட்டர்களில் காலை 8 மணிக்கே சிறப்புக் காட்சிகளுக்கான முன்பதிவை ஆரம்பித்துள்ளனர். படம் வெளியாகும் நாளைத் தவிர்த்து விட்டு அக்டோபர் 20 முதல் சில தியேட்டர்களில் முன்பதிவை நடத்தி வருகின்றனர்.
9 மணி முதல் காட்சிகளை நடத்தலாம் என அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில் 8 மணி முதல் எப்படி காட்சிகளை நடத்த உள்ளனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், படம் வெளியாகும் நாளில் அதிகாலை சிறப்புக் காட்சிகளை நடத்தத் தயாரிப்பு நிறுவனம் ‛விடாமுயற்சி' செய்து வருவதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.