இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி |
விஜய், த்ரிஷா மற்றும் பலர் நடித்துள்ள 'லியோ' படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்காக அக்டோபர் 19 முதல் 24ம் தேதி வரை தினசரி 5 காட்சிகள் திரையிட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
அரசு ஆணையை சரியாக புரிந்து கொள்ளாத பல ரசிகர்கள் வேண்டுமென்றே அதிகாலை 4 மணிக்கே சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி என பொய்யான தகவலை சமூக வலைத்தளங்களில் பரப்பினர். நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் காலை 9 மணி முதல் காட்சிகளை நடத்திக் கொள்ளலாம் என்று கூறியிருந்தார்.
ஆனால், கோவை உள்ளிட்ட சில நகரங்களில் உள்ள தியேட்டர்களில் காலை 8 மணிக்கே சிறப்புக் காட்சிகளுக்கான முன்பதிவை ஆரம்பித்துள்ளனர். படம் வெளியாகும் நாளைத் தவிர்த்து விட்டு அக்டோபர் 20 முதல் சில தியேட்டர்களில் முன்பதிவை நடத்தி வருகின்றனர்.
9 மணி முதல் காட்சிகளை நடத்தலாம் என அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில் 8 மணி முதல் எப்படி காட்சிகளை நடத்த உள்ளனர் என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், படம் வெளியாகும் நாளில் அதிகாலை சிறப்புக் காட்சிகளை நடத்தத் தயாரிப்பு நிறுவனம் ‛விடாமுயற்சி' செய்து வருவதாகவும் கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.