மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா உள்ளிட்டோர் நடித்த 'லியோ' திரைப்படம் வரும் 19ம் தேதி தியேட்டர்களில் வெளியிட உள்ளதாகப் பட குழு தெரிவித்துள்ளது. இப்படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி, காலை 7, 8, 9 மணி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் பல்வேறு முறைகளில் அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறது. ஆனால் இதுவரை அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.
இதனால் மாற்றுத்திட்டத்தை படக்குழு யோசித்தது. பட வெளியீட்டிற்கு ஒரு நாள் முன்னதாக அக்டோபர் 18ம் தேதியன்றே பிரிமீயர் காட்சிகள் என்ற பெயரில் இரவு 7 மணி, 9 மணி, 11 மணி என சிறப்புக் காட்சிகளை நடத்தலாமா என பேசி வருவதாகத் தகவல் வெளியானது.
இந்த நிலையில், லியோ படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை நாள்தோறும் 5 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையரங்குகளில் லியோ திரைப்படம் காலையிலேயே முதல் காட்சி திரையிடப்படும். இதனையடுத்து விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.