மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா உள்ளிட்டோர் நடித்த 'லியோ' திரைப்படம் வரும் 19ம் தேதி தியேட்டர்களில் வெளியிட உள்ளதாகப் பட குழு தெரிவித்துள்ளது. இப்படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சி, காலை 7, 8, 9 மணி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என தயாரிப்பு நிறுவனம் பல்வேறு முறைகளில் அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறது. ஆனால் இதுவரை அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.
இதனால் மாற்றுத்திட்டத்தை படக்குழு யோசித்தது. பட வெளியீட்டிற்கு ஒரு நாள் முன்னதாக அக்டோபர் 18ம் தேதியன்றே பிரிமீயர் காட்சிகள் என்ற பெயரில் இரவு 7 மணி, 9 மணி, 11 மணி என சிறப்புக் காட்சிகளை நடத்தலாமா என பேசி வருவதாகத் தகவல் வெளியானது.
இந்த நிலையில், லியோ படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரை நாள்தோறும் 5 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையரங்குகளில் லியோ திரைப்படம் காலையிலேயே முதல் காட்சி திரையிடப்படும். இதனையடுத்து விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.