புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! | புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? | கலகலப்பு 3ம் பாகத்தில் மீண்டும் விமல்? | லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்! | மெய்யழகன் படத்துடன் இணைந்த சர்தார் 2! | நேருக்கு நேர் மோதும் அஜித், சூர்யா படங்கள்! | படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கென்று தனி வாட்ஸ் அப் குரூப் உள்ளது. அதேபோல சில தயாரிப்பாளர்கள் தனியாக வாட்ஸ் அப் குரூப் தொடங்கி நடத்தி வருகிறார்கள். இந்த குரூப்புகளில் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் பற்றியும், சங்கத்தின் செயல்பாடுகள் பற்றியும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். உறுப்பினர்கள் மற்ற உறுப்பினர்கள் குறித்து தனிப்பட்ட முறையிலும் விமர்சித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சங்கத்தின் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, சங்கத்தின் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், நிரந்தர உறுப்பினர்கள் பற்றி சமூக வலைத்தளங்களில் ஆதாரமின்றி அவதூறு பரப்புகிறவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இதுபோன்ற அவதூறு கருத்துக்களை வாட்ஸ் அப் அட்மின்கள் உடனடியாக நீக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவதூறு பரப்பும் உறுப்பினர்களோடு மற்ற உறுப்பினர்கள் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்”.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.