டிஎன்ஏ படத்தை அவங்களுக்கு அர்ப்பணிக்கிறேன் : ஹீரோ அதர்வா முரளி நெகிழ்ச்சி | 'தி ராஜா சாப் 1000 கோடி வசூலிக்கும்' : இயக்குனர் மாருதி நம்பிக்கை | ஐதராபாத் திரைப்பட நகரம் பற்றி கஜோல் பேச்சு : திரையுலகம் அதிர்ச்சி | தக் லைப் - கர்நாடகா வினியோகஸ்தர் விலகல்? | குத்துச்சண்டை வீரராகிறார் மஹத் | கிஷோர் ஜோடியாக இணைந்த அம்மு அபிராமி | மலேசிய பாடகர் 'டார்க்கி' நாகராஜா வாழ்க்கை சினிமா ஆகிறது | வெப் தொடராக ஒளிபரப்பாகிறது முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை வழக்கு | பிளாஷ்பேக்: ஹீரோக்கள் ஆதிக்கத்தை வென்ற மாதுரி தேவி | பிளாஷ்பேக்: சினிமாவில் சிவகுமாரின் 60வது ஆண்டு: தீராத அந்த இரண்டு ஏக்கங்கள் |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கென்று தனி வாட்ஸ் அப் குரூப் உள்ளது. அதேபோல சில தயாரிப்பாளர்கள் தனியாக வாட்ஸ் அப் குரூப் தொடங்கி நடத்தி வருகிறார்கள். இந்த குரூப்புகளில் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் பற்றியும், சங்கத்தின் செயல்பாடுகள் பற்றியும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். உறுப்பினர்கள் மற்ற உறுப்பினர்கள் குறித்து தனிப்பட்ட முறையிலும் விமர்சித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சங்கத்தின் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, சங்கத்தின் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், நிரந்தர உறுப்பினர்கள் பற்றி சமூக வலைத்தளங்களில் ஆதாரமின்றி அவதூறு பரப்புகிறவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இதுபோன்ற அவதூறு கருத்துக்களை வாட்ஸ் அப் அட்மின்கள் உடனடியாக நீக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவதூறு பரப்பும் உறுப்பினர்களோடு மற்ற உறுப்பினர்கள் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்”.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.