சூர்யாவின் புதிய தயாரிப்பு நிறுவனம் ஏன் ? | 'ஹீரோ மெட்டீரியல்' இல்லை என்ற கேள்வி... : அமைதியாக பதிலளித்த பிரதீப் ரங்கநாதன் | ஒரே நாளில் இளையராஜாவின் இரண்டு படங்கள் இசை வெளியீடு | நான் அவள் இல்லை : வித்தியாசமான கதாபாத்திரத்தில் நிகிலா விமல் | 27 வருடங்களுக்குப் பிறகு நாகார்ஜூனாவுடன் இணையும் தபு | பல்டி பட ஹீரோவின் படத்திற்கு சென்சாரில் சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய படக்குழு | நெகட்டிவ் கதாபாத்திரத்தில் ‛கேஜிஎப்' நாயகி | 100 கோடி கொடுத்தாலும் சஞ்சய் லீலா பன்சாலியுடன் பணியாற்ற மாட்டேன் : இசையமைப்பாளர் இஸ்மாயில் தர்பார் | தொடர்ந்து 'டார்கெட்' செய்யப்படும் பிரியங்கா மோகன் | 25 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய 1 ரூபாய் அட்வான்ஸ் |
தமிழ், தெலுங்குப் படங்களில் அதிகமாக நடித்து பேரும், பணமும், புகழும் பெற்றவர் கன்னட நடிகரான பிரகாஷ்ராஜ். மற்ற மொழிப் படங்களில் நடித்தாலும் கர்நாடகாவுக்கும், கன்னடத்திற்கும் மட்டுமே தன்னுடைய ஆதரவு என்பதை நிரூபித்திருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக அரசியல் கருத்துக்களைப் பதிவிட்டு தன்னை ஒரு நியாயமானவர் என காட்டிக் கொண்டவர். அவரது இரட்டை வேடம் தற்போது அம்பலமாகியுள்ளது.
தமிழ் நடிகர் சித்தார்த் நடிப்பு மற்றும் தயாரிப்பில் நேற்று வெளியான 'சித்தா' படத்தின் கன்னட டப்பிங் படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பை நேற்று பெங்களூருவில் நடத்தினார். அப்போது கன்னட அமைப்பைச் சேர்ந்த சிலர் அரங்கிற்குள் நுழைந்து சித்தார்த்தை மிரட்டி வெளியேற்றினர். அதற்கு வருத்தம் தெரிவித்து டுவீட் ஒன்றைப் பதிவிட்டிருந்தார் பிரகாஷ்ராஜ். ஆங்கிலத்தில் பதிவிட்டிருந்த டுவீட்டில் காவிரி விவகாரம் பற்றி அவர் எதுவும் குறிப்பிடவில்லை.
அதே சமயம் கன்னடத்தில் அவர் பதிவிட்டிருந்த டுவீட்டில், “காவிரி எங்களுடையதே… ஆம், எங்களுடையதே” என்றுதான் ஆரம்பித்துள்ளார். மேலும், காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா காங்கிரஸ் அரசைப் பற்றி எந்த விமர்சனத்தையும் வைக்காமல், மத்திய அரசைப் பற்றி மட்டுமே குறை கூறி கருத்து தெரிவித்துள்ளார்.
கன்னடத்தில் ஒரு மாதிரி டுவீட், ஆங்கிலத்தில் வேறு மாதிரி டுவீட் எனப் போட்டு அவர் எப்படிப்பட்ட நிலையில் உள்ளார் என்பதைக் காட்டியுள்ளார். கன்னடத்தில் டுவீட் போட்டாலும் அதை மொழி மாற்றம் செய்து புரிந்து கொள்வார்களே என்ற அடிப்படை விஷயம் கூட தெரியாமல் இருக்கிறார்.
காவிரிக்கு ஆதரவாக கர்நாடகாவுக்கு ஆதரவாக பிரகாஷ் ராஜ் பதிவிட்டுள்ளது தமிழ் சினிமா ரசிகர்களையும், தமிழக விவசாயிகளையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.
பிரகாஷ் ராஜுக்கு எதிர்ப்பு தெரிவித்து எந்த ஒரு தமிழ் நடிகரும் இதுவரை வாய் திறக்கவில்லை. தற்போது தனுஷ் இயக்கி வரும் படம் உட்பட சில படங்களில் நடித்து வருகிறார் பிரகாஷ்ராஜ்.