புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
பி.வாசு இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், மகிமா நம்பியார், வடிவேலு மற்றும் பலர் நடிக்கும் படம் 'சந்திரமுகி 2'. இப்படம் வரும் செப்டம்பர் 28ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இதற்கு முன்பாக இப்படத்தை செப்டம்பர் 15ம் தேதி வெளியிடுவதாக அறிவித்திருந்த நிலையில் திடீரென தள்ளி வைத்தனர்.
செப்டம்பர் 15ம் தேதி வெளியான 'மார்க் ஆண்டனி' படத்தின் டிரைலருக்கு 'சந்திரமுகி 2' டிரைலருக்குக் கிடைத்த வரவேற்பை விட மிக அதிகமாக இருந்தது. அந்தப் போட்டியை சமாளிக்க முடியாமல்தான் 'சந்திரமுகி 2' வெளியீட்டைத் தள்ளி வைத்தார்கள் என ஒரு தகவல் வெளியானது. ஆனால், ஹைதராபாத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் இதற்கான விளக்கத்தை இயக்குனர் பி.வாசு தெரிவித்துள்ளார்.
“பட வெளியீட்டிற்கு ஒரு வாரம் முன்னதாக டி.ஐ. செய்பவர்களிடமிருந்து திடீரென போன் வந்தது. படத்தின் 480 ஷாட்களைக் காணவில்லை என்றார்கள். எங்களுக்கு மிகவும் அதிர்ச்சியானது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. சிஜி, டிஐ, கிராபிக்ஸ் என பல இடங்களில் அதைத் தேடினோம். 150 டெக்னீஷியன்கள் ஒரு எபிசோடுக்காக வேலை செய்தார்கள். எங்களுக்கு மிகவும் குழம்பிய நிலையில் நான்கைந்து நாட்களுக்குப் பிறகே எங்களுக்கு அந்தக் காட்சிகளை கண்டுபிடிக்க முடிந்தது. வேண்டுமென்றே செய்யவில்லை, எங்களுக்கும் அது ஆபத்தானதுதான். இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் படத்தைத் தள்ளி வைத்தோம்,” என்றார்.