கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா கடந்த 19ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மிகுந்த மன உளைச்சல் காரணமாக மீரா தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட விஜய் ஆண்டனி, ‛என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள். அவளுடன் நானும் இறந்துவிட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்துவிட்டேன்' என சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
திடீரென மகள் இறந்ததால் படப்பிடிப்புகளில் பங்கேற்காமல் இருந்து வந்த விஜய் ஆண்டனி, தற்போது ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பி வருவதால் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளார். இதனையடுத்து புது இயக்குனர் இயக்கும் ஒரு படத்தில் நடித்து வரும் விஜய் ஆண்டனி, பெங்களூருவில் நடக்கும் படப்பிடிப்பில் இன்று முதல் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.