'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி |
சமீபத்தில் நடிகர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிளஸ் டூ படிக்கும் மாணவியான அவர் மன அழுத்தம் காரணமாக இந்த முடிவை தேடிக் கொண்டார் என்று சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நடிகை சமந்தா தனது சோசியல் மீடியா சாட்டிங்கின் போது டீனேஜ் இளைஞர்கள் மனநிலை குறித்தும், அவர்களுக்கு சொன்ன அறிவுரையும் வைரலாகி வருகிறது. இந்த சாட்டிங்கின் போது ரசிகர் ஒருவர், டீனேஜ் இளைஞர்கள் வாழ்க்கையை மாற்றும் முடிவுகளை எடுக்கும்போது என்ன செய்ய வேண்டும் என நீங்கள் கூறுவீர்கள் என கேட்டார்.
அதற்கு பதிலளித்த சமந்தா, “பொதுவாகவே இப்போது பெரும்பாலான இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையே முடிந்து விட்டது என்று புலம்புவதை பார்க்க முடிகிறது. இதுதான் அவர்களிடையே உள்ள மிக மோசமான எண்ணம். ஆனால் இங்கிருந்து தான் வாழ்க்கை ஆரம்பிக்கிறது. இந்த பயணத்தில் நீங்கள் எல்லாவித சிரமங்களையும் கஷ்டங்களையும் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்.
சில நேரங்களில் இப்படி பயணிக்கும்போது நீங்கள் முன்பு இருந்ததை விட மிக அதிக பலமானவர்களாக கூட மாறுவீர்கள். இது எனக்கே நடந்துள்ளது. 25 வயதுக்கு முன் இருந்த நான் வேறு. இதேபோன்று பல பிரச்சனைகளை சந்தித்து எனது வாழ்க்கையில் முன்பு இருந்ததை விட சந்தோசமாக, பலமானவளாக, பாசிட்டிவான நபராக மாறியுள்ளேன்” என்று கூறியுள்ளார்.