மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தமிழில் ராதா மோகன் இயக்கிய அழகிய தீயே என்கிற படத்தில் அறிமுகமானவர் மலையாள நடிகை நவ்யா நாயர். தொடர்ந்து சேரனுடன் மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை உள்ளிட்ட படங்களில் நடித்தார். 2010ல் சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டிலானார். இவர்களுக்கு ஒரு மகனும் உண்டு. இரண்டு வருடங்களுக்கு முன்பு 'ஒருத்தி' என்கிற படத்தின் மூலம் நடிப்பிற்கு ரீ என்ட்ரி கொடுத்தார் நவ்யா நாயர்.
கேரளாவில் சுங்கத்துறையில் இணை ஆணையராக இருந்த சச்சின் சாவந்த் என்பவர் அமலாக்கத்துறை சோதனையில் சிக்கினார். விசாரணையில் இவருக்கும் நடிகை நவ்யா நாயருக்கும் இடையே நட்பு இருந்தது தெரிய வந்தது. குறிப்பாக நவ்யா நாயருக்கு சச்சின் சாவந்த் பரிசுப்பொருட்கள் வழங்கியதாகவும் சொல்லப்படுகிறது. ஆனாலும் இது குறித்து மறுக்காத நவ்யா நாயர் தங்களிடம் இருப்பது வெறும் நட்பு மட்டுமே என்றும், நட்பு ரீதியாக சில பரிசு பொருட்கள் கொடுத்துள்ளார்.. அவ்வளவுதான் என்று கூறியிருந்தார்.
ஆனாலும் இப்படி அமலாக்கத்துறை விசாரணை வரை நவ்யா நாயரின் பெயர் அடிபட்டதால் கணவன் - மனைவி இருவருக்கும் இதன் காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சொல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து இவர்கள் இருவரும் பிரிய இருக்கிறார்கள் என்றும் செய்திகள் பரவின. இதற்கு, நவ்யா நாயர் தனது கணவர், மகன் மற்றும் மாமியாருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு, வதந்தி பரப்பியவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.