300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் | பிளாஷ்பேக்: மூன்று திரைப்படங்களில் மட்டுமே நடித்து, முதன்மை குழந்தை நட்சத்திரம் என்ற உச்சம் தொட்ட “பேபி சரோஜா” | பிரதீப்பின் ‛எல்ஐகே' தள்ளிவைப்பு : 'டியூட்' தயாரிப்பாளர் மீது 'எல்ஐகே' தயாரிப்பாளர் குற்றச்சாட்டு |
சென்னை: என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள் என விஜய் ஆண்டனி தெரிவித்து உள்ளார்.
நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா(16) சில தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக திரையுலகினர் பலரும் மீராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
விஜய் ஆண்டனி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: என் மகள் மீரா மிகவும் அன்பானவள் தைரியமானவள். அவள் இப்போது சாதி, மதம், பணம், பொறுமை, வலி, வன்மம், இல்லாத ஒரு அமைதியான இடத்திற்கு தான் சென்று இருக்கிறாள். என்னிடம் பேசிக்கொண்டு தான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்து விட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்து விட்டேன். அவள் பெயரில் நான் செய்யப் போகும் நல்ல காரியங்களை அனைத்தையும் அவளே துவங்கி வைப்பாள்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.