மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தெகிடி, ஓ மை கடவுளே, போர் தொழில் உட்பட பல படங்களில் நடித்தவர் அசோக் செல்வன். இவரும் நடிகை கீர்த்தி பாண்டியனும் ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் நடிக்க தொடங்கிய போது அவர்களுக்கிடையே காதல் உருவாகி தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். மேலும் நடிகர் அருண்பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன், அன்பிற்கினியாள், கொஞ்சி பேசினாள் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் திருமணம் கடந்த 13ம் தேதி நடைபெற்றது. அவர்களின் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியான போது சிலர் அவர்களின் ஜோடியை விமர்சித்து கருத்து வெளியிட்டுள்ளார்கள். இந்த நிலையில் கீர்த்தி பாண்டியனுடன் தான் இடம்பெற்றுள்ள ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, 'இந்த உலகின் மிக அழகான பெண்ணுடன் நான்' என்று பதிவிட்டு, விமர்சித்தவர்களுக்கு ஒரு பதிலடி கொடுத்துள்ளார் அசோக் செல்வன்.