டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தெகிடி, ஓ மை கடவுளே, போர் தொழில் உட்பட பல படங்களில் நடித்தவர் அசோக் செல்வன். இவரும் நடிகை கீர்த்தி பாண்டியனும் ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் நடிக்க தொடங்கிய போது அவர்களுக்கிடையே காதல் உருவாகி தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். மேலும் நடிகர் அருண்பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன், அன்பிற்கினியாள், கொஞ்சி பேசினாள் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் திருமணம் கடந்த 13ம் தேதி நடைபெற்றது. அவர்களின் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியான போது சிலர் அவர்களின் ஜோடியை விமர்சித்து கருத்து வெளியிட்டுள்ளார்கள். இந்த நிலையில் கீர்த்தி பாண்டியனுடன் தான் இடம்பெற்றுள்ள ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, 'இந்த உலகின் மிக அழகான பெண்ணுடன் நான்' என்று பதிவிட்டு, விமர்சித்தவர்களுக்கு ஒரு பதிலடி கொடுத்துள்ளார் அசோக் செல்வன்.




