பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
'கேஜிஎப் 2' படத்தின் மூலம் இந்திய அளவில் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டவர் கன்னட இயக்குனரா பிரசாந்த் நீல். அப்படத்தை அடுத்து பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் மற்றும் பலர் நடிக்கும் 'சலார்' படத்தை இயக்கி வருகிறார். அப்படம் செப்டம்பர் 28ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அன்றைய தினம் படம் வெளியாகாது என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.
படத்தின் ஓடிடி உரிமை, சாட்டிலைட் உரிமை ஆகியவற்றின் விலை எதிர்பார்த்த விலைக்கு அமையவில்லை என்பதால்தான் பட வெளியீட்டைத் தள்ளி வைத்தார்கள் எனச் சொன்னார்கள். இந்நிலையில் படத்தின் ஓடிடி உரிமை, சாட்டிலைட் உரிமை ஆகியவற்றில் சர்வதேச அளவில் பிரபலமான இரண்டு நிறுவனங்கள் வாங்கியுள்ளதாம். அவற்றின் விலையால் மட்டுமே படத்தின் மொத்த பட்ஜெட்டும் வந்துவிட்டதாம். தியேட்டர் உரிமை, இதர உரிமைகள் ஆகியவை படத்திற்குக் கூடுதல் லாபம் என்கிறார்கள்.
இந்த முக்கிய சிக்கல்கள் தீர்ந்ததால் படத்தின் வெளியீடு பற்றி அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.