அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

'ஜவான்' படத்தின் மூலம் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளார் அட்லீ. தமிழில் விஜய் நடித்த மூன்று படங்களை அடுத்தடுத்து இயக்கியவர் ஹிந்தியில் ஷாரூக்கான் நடிக்க 'ஜவான்' படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்த போது பலரும் ஆச்சரியப்பட்டார்கள். அந்த ஆச்சரியம் பெரும் வெற்றிக்குப் பிறகு மேலும் அதிகரித்துள்ளது.
இந்திய அளவில் பல சினிமா பிரபலங்கள் 'ஜவான்' கூட்டணியை வாழ்த்தி வருகிறார்கள். அவர்களில் தெலுங்கு நடிகரான அல்லு அர்ஜுனும் ஒருவர். ஷாரூக், நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, அட்லீ, அனிருத் என ஒவ்வொருவரையும் தனித் தனியாகக் குறிப்பிட்டு நீளமான பதிவொன்றை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதற்கு நன்றி தெரிவித்த அனிருத், 'நன்றி எனது சகோதரரே” என்றார். அதற்கு அல்லு அர்ஜுன், “வெறும் நன்றி மட்டும் சொல்லக் கூடாது, எனக்கு சிறந்த பாடல்களும் வேண்டும்,” என்று பதிலளித்தார். அதற்கு 'ரெடி' என அனிருத் கூறியுள்ளார்.
இந்த உரையாடல் மூலம் 'புஷ்பா 2' படத்திற்குப் பிறகு அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள படத்தை அட்லீ தான் இயக்க உள்ளார். அதற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். அதனால், 'அ-அ-அ' கூட்டணி, அதாவது அல்லு அர்ஜுன், அட்லீ, அனிருத் கூட்டணி உருவாக உள்ளது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.