பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
நடிகர் விஜய் விரைவில் தனது விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றப்போவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், விஜய் மக்கள் இயக்கத் தலைவர் புஸ்ஸி ஆனந்த் அவ்வப்போது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட புஸ்ஸி ஆனந்த், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் செய்து வரும் சமூக பணிகள் குறித்து அனைவரிடத்திலும் கேட்டறிந்தார்.
அப்போது ஒரு பெண் நிர்வாகி, தன்னை விஜய் ரசிகை என்று சொல்லி பேச தொடங்கிய போது, ‛‛இனிமேல் எப்போதும் தலைவரின் பெயரை சொல்லக்கூடாது, தளபதி என்று மட்டும் தான் சொல்ல வேண்டும்'' என்று மைக்கில் கூறி இருக்கிறார். அதையடுத்து அங்கு பேசியவர்கள் அனைவருமே விஜய்யின் பெயரை சொல்லாமல் தளபதி என்று மட்டுமே கூறியிருக்கிறார்கள்.