நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி | பெண்கள் அரசியல் கூட்டங்களுக்கு செல்லக்கூடாது: அம்பிகா அட்வைஸ் | நயன்தாரா வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் | பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் |
அட்லீ இயக்கத்தில் ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜவான். இந்த படம் வருகிற ஏழாம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் ஜவான் படம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நடிகர் ஷாரூக்கான், நடிகை நயன்தாரா ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்கள். ஷாரூக்கான் தனது மகள் சுகானாவுடனும், நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடனும் இந்த தரிசனத்தில் கலந்து கொண்டு உள்ளார்கள். நேற்று இரவு திருப்பதிக்கு சென்று அவர்கள் அங்கு தங்கி இருந்து இன்று காலை சுப்ரபாத சேவையில் தரிசனம் செய்துள்ளார்கள். குறிப்பாக, திருப்பதி கோயிலுக்கு தற்போது முதல் முறையாக சென்றுள்ள ஷாரூக்கான் வேஷ்டி - சட்டை அணிந்து சாமி தரிசனம் செய்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.