கார்த்திக் சுப்பராஜ், சிவகார்த்திகேயன் புதிய கூட்டணி | தமன்னாவை ஏமாற்றிய ஒடேலா- 2! | சமூக வலைதளங்களில் இருந்து மீண்டும் பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் | மனைவிகிட்ட சண்டை போட்டுக்கிட்டே இருந்தா வெளியில போய் ஜெயிக்க முடியாது! -நடிகை ரோஜா | டி.ராஜேந்தரின் பாடலை தழுவி உருவாக்கப்பட்ட சூர்யாவின் ரெட்ரோ பட பாடல்! | முன்னேறிச் செல்லுங்கள்- தமிழக கிரிக்கெட் வீரருக்கு சிவகார்த்திகேயன் பாராட்டு! | புதிய விதிகளை அமல்படுத்திய ஆஸ்கர் அகாடமி | என்ன சமந்தா தனது முதல் இரண்டு படங்கள் பற்றி இப்படி சொல்லிட்டார்.... | 'தொடரும்' படத்தில் நடிப்பதற்கு முன் இயக்குனர் மீது ஷோபனாவுக்கு வந்த சந்தேகம் | அட்ஜஸ்ட்மென்ட் குறித்த மாலா பார்வதியின் கருத்துக்கு நடிகை ரஞ்சனி கண்டனம் |
நேஷனல் கிரஷ் என பட்டம் கொடுத்து அனைவரும் அழைப்பதாலோ என்னவோ நடிகை ராஷ்மிகா தற்போது தெலுங்கு, தமிழ் படங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதை விட பாலிவுட்டில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே அவர் நடித்த குட்பை மற்றும் மிஷன் மஞ்சு ஆகிய படங்கள் ஹிந்தியில் வரவேற்பை பெற தவறிய நிலையில் தற்போது ரன்வீர் கபூருடன் இணைந்து நடித்துள்ள அனிமல் என்கிற திரைப்படத்தை தான் ரொம்பவும் எதிர்பார்த்து இருக்கிறார். அதுமட்டுமல்ல ஹிந்தியிலேயே தொடர்ந்து காலுன்றும் விதமாக ஷாகித் கபூருடன் அடுத்ததாக நடிக்கும் வாய்ப்பு தேடி வர அதனை ஒப்புக் கொண்டார்.
இதற்காக தெலுங்கில் நிதின் ஜோடியாக வெங்கி குடுமுலா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேடிவந்த வாய்ப்பை கால்சீட் காரணம் காட்டி ஒதுக்கினார் ராஷ்மிகா. ஆனால் தற்போது ஷாகித் கபூர் படம் பட்ஜெட் காரணமாக கைவிடப்பட்டுள்ளதாக ராஷ்மிகாவுக்கு தெரிய வந்ததைத் தொடர்ந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இன்னும் நிதின் படத்திற்கு வேறு கதாநாயகி தேர்வு செய்யப்படவில்லை என்பதால் ராஷ்மிகாவே அந்த படத்தை ஒப்புக் கொள்வாரா, இல்லை அந்த படத்திற்கு வேறு கதாநாயகி தேர்வு செய்யப்படுவாரா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.