துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
நேஷனல் கிரஷ் என பட்டம் கொடுத்து அனைவரும் அழைப்பதாலோ என்னவோ நடிகை ராஷ்மிகா தற்போது தெலுங்கு, தமிழ் படங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதை விட பாலிவுட்டில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே அவர் நடித்த குட்பை மற்றும் மிஷன் மஞ்சு ஆகிய படங்கள் ஹிந்தியில் வரவேற்பை பெற தவறிய நிலையில் தற்போது ரன்வீர் கபூருடன் இணைந்து நடித்துள்ள அனிமல் என்கிற திரைப்படத்தை தான் ரொம்பவும் எதிர்பார்த்து இருக்கிறார். அதுமட்டுமல்ல ஹிந்தியிலேயே தொடர்ந்து காலுன்றும் விதமாக ஷாகித் கபூருடன் அடுத்ததாக நடிக்கும் வாய்ப்பு தேடி வர அதனை ஒப்புக் கொண்டார்.
இதற்காக தெலுங்கில் நிதின் ஜோடியாக வெங்கி குடுமுலா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேடிவந்த வாய்ப்பை கால்சீட் காரணம் காட்டி ஒதுக்கினார் ராஷ்மிகா. ஆனால் தற்போது ஷாகித் கபூர் படம் பட்ஜெட் காரணமாக கைவிடப்பட்டுள்ளதாக ராஷ்மிகாவுக்கு தெரிய வந்ததைத் தொடர்ந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இன்னும் நிதின் படத்திற்கு வேறு கதாநாயகி தேர்வு செய்யப்படவில்லை என்பதால் ராஷ்மிகாவே அந்த படத்தை ஒப்புக் கொள்வாரா, இல்லை அந்த படத்திற்கு வேறு கதாநாயகி தேர்வு செய்யப்படுவாரா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.