சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை |
நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற தசை அழர்ச்சி நோயால் பாதிக்கப்பட்டு தற்போது அமெரிக்காவில் அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார். குறைந்தபட்சம் அவர் 6 மாதங்கள் வரை சிகிச்சை பெறுவார் என்று கூறப்படுகிறது. இதற்கான தான் ஒப்புக் கொண்ட படங்களை முடித்துக் கொடுத்தார். புதிய படங்களுக்கு வாங்கிய முன் பணத்தை திருப்பிக் கொடுத்தார்.
தற்போது இதே போன்று நடிகை பூஜா ஹெக்டேவும் உடல் நலனை கருத்தில் கொண்டு பிரேக் எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ராதே ஷ்யாம் படத்தில் நடித்தபோது பூஜாவுக்கு காலில் பிரச்சினை ஏற்பட்டது. கடும் வலியால் துடித்தார். தொடர் வலி காரணமாக அவருக்கு காலில் ஒரு அறுவை சிகிக்சை செய்யப்பட வேண்டும் என்றும் இதனால் குறைந்தபட்சம் 5 மாதங்கள் ஓய்வெடுக்க வேண்டியது வரும் என்றும் டாக்டர்கள் கூறியிருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில்தான் அவர் தெலுங்கில் மகேஷ்பாபு ஜோடியாக ஒப்பந்தமாகி இருந்த 'குண்டூர் காரம்' படத்தில் இருந்து விலகினார். அடுத்து பவன் கல்யாணின் 'உஸ்தாத் பகத் சிங்' படத்திலும் நடிக்க இருந்தார். அதில் இருந்தும் விலகிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சமந்தா போன்று பூஜாவும் உண்மையை வெளிப்படையாக பேசினால்தான் என்ன நிலவரம் என்பது தெரிய வரும் என்கிறார்கள்.