இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து என்ற படத்தில் அறிமுகமானவர் சுகன்யா. அதன்பிறகு கமல், விஜயகாந்த், கார்த்திக், சத்யராஜ் என பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். சமீபகாலமாக அவ்வப்போது சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து வரும் சுகன்யா, தற்போது டிஎன்ஏ என்ற ஒரு மலையாள படத்தில் இடம்பெற்றுள்ள தமிழ் சூழலுக்கான ஒரு பாடலை எழுதி, பாடல் ஆசிரியராக அறிமுகம் ஆகியிருக்கிறார். சுரேஷ் பாபு என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு, சரத் என்பவர் இசையமைத்துள்ளார்.
இது குறித்து சுகன்யா வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், டிஎன்ஏ என்ற மலையாள படத்தில் நான் எழுதி உள்ள தமிழ் பாடல் விரைவில் வெளி வர உள்ளது. ரொம்ப அருமையான பாடல். இந்த படமும் பாடலும் சூப்பர் ஹிட்டாகும் என்று நினைக்கிறேன். இந்த பாடலை கேட்டதும் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். இந்த பாடல் எழுத வாய்ப்பு அளித்த இயக்குனர், இசையமைப்பாளருக்கு மிக்க நன்றி என தெரிவித்திருக்கிறார்.