இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
பாரதிராஜா இயக்கிய புது நெல்லு புது நாத்து என்ற படத்தில் அறிமுகமானவர் சுகன்யா. அதன்பிறகு கமல், விஜயகாந்த், கார்த்திக், சத்யராஜ் என பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். சமீபகாலமாக அவ்வப்போது சில படங்களில் கேரக்டர் ரோல்களில் நடித்து வரும் சுகன்யா, தற்போது டிஎன்ஏ என்ற ஒரு மலையாள படத்தில் இடம்பெற்றுள்ள தமிழ் சூழலுக்கான ஒரு பாடலை எழுதி, பாடல் ஆசிரியராக அறிமுகம் ஆகியிருக்கிறார். சுரேஷ் பாபு என்பவர் இயக்கியுள்ள இந்த படத்திற்கு, சரத் என்பவர் இசையமைத்துள்ளார்.
இது குறித்து சுகன்யா வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில், டிஎன்ஏ என்ற மலையாள படத்தில் நான் எழுதி உள்ள தமிழ் பாடல் விரைவில் வெளி வர உள்ளது. ரொம்ப அருமையான பாடல். இந்த படமும் பாடலும் சூப்பர் ஹிட்டாகும் என்று நினைக்கிறேன். இந்த பாடலை கேட்டதும் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். இந்த பாடல் எழுத வாய்ப்பு அளித்த இயக்குனர், இசையமைப்பாளருக்கு மிக்க நன்றி என தெரிவித்திருக்கிறார்.