ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
ஸ்ரீவிநாயகா பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகும் படம் "பாதகன்". ஆர்.சதீஷ் ராஜா நாயகனாக நடித்து தயாரிக்கும் இதில் அம்சரேகா, பிரியாஸ்ரீ, ராஜசேகர், கராத்தே ராஜா, குல்ஷன், முத்துக்காளை, போண்டாமணி, ராஜாராம், கே.வி. மணிகண்ணன் ஆகியோர் நடிக்கின்றனர். ரவிகிரண் இசையமைக்கிறார்.
படம் பற்றி ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் சி.தண்டபானி கூறும்போது, "இயற்கை வளங்களை கொள்ளை அடித்து தான் மட்டுமே வாழ்வதற்கான செயல்களை வில்லன் திட்டம் போட்டு செய்து வருகிறான். இதை கண்டுபிடித்த கதாநாயகனும் , கதாநாயகியும் ஊர்மக்களிடமும், காவல்துறையிடமும் எடுத்து சொல்ல முற்படுகின்றனர். இதனால் அவர்கள் இருவரும் வில்லனால் பெரும் இன்னல்களுக்கு ஆளாகின்றனர். முடிவில் வில்லன் என்ன செய்தான் என்பதை மிகவும் திரில்லாகவும், மக்கள் அதிர்ச்சியோடு பார்க்கும் வகையிலும் இதில் சொல்லி இருக்கிறேன்" என்கிறார்.