பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
என்னை அறிந்தால் மற்றும் விஸ்வாசம் ஆகிய அஜித் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அதன் மூலம் பிரபலமானவர் பேபி அனிகா சுரேந்திரன். தற்போது இளம்பெண்ணாக வளர்ந்து விட்ட அவர் ஒரு சில படங்களில் கதாநாயகியாகவும் இன்னும் சில படங்களில் முக்கிய வேடங்களிலும் நடித்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியாகியுள்ள 'கிங் ஆப் கொத்தா' திரைப்படத்தில் துல்கர் சல்மானின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அனிகா சுரேந்திரன். இந்த நிலையில் யாரும் தன்னை அடையாளம் கண்டுபிடித்துவிட முடியாதபடி முகத்தில் மாஸ்க் அணிந்து இந்த படத்தின் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களோடு ரசிகர்களாக பார்த்து ரசித்துள்ளார் அனிகா சுரேந்திரன்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், “இதுதான் நான் முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் முதல் படம். தியேட்டரில் ரசிகர்களின் ஆரவாரத்துடன் இந்த படத்தைப் பார்க்கும்போது எனக்கு புதிய அனுபவமாக இருந்தது. இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்திருக்கிறேன் என்றாலும் ஒரு மிகப்பெரிய படத்தில் நானும் நடித்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி” என்று கூறியுள்ளார் அனிகா சுரேந்திரன்.