ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்யுங்க : ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி | கட்டுப்படுத்த முடியவில்லை, நிறைய பரோட்டா சாப்பிட்டேன் : நித்யா மேனன் | இந்தியாவில் மட்டும் ரூ.100 கோடி வசூலைக் குவித்த ‛எப் 1' | இட்லி கடை படத்தின் முதல் பாடலின் அப்டேட் தந்த ஜி.வி.பிரகாஷ் | 'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி |
துல்கர் சல்மான் நடிப்பில் மலையாளத்தில் உருவாகியுள்ள கிங் ஆப் கோதா திரைப்படம் வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி பான் இந்தியா ரிலீஸ் ஆக வெளியாக இருக்கிறது. இதற்கான புரமோஷன் பணிகளில் கடந்த சில நாட்களாக துல்கர் சல்மான் ஈடுபட்டு வருகிறார். இந்த படத்தை இயக்குவதன் மூலம் பிரபல மலையாள இயக்குனர் ஜோஷியின் மகன் அபிலாஷ் ஜோஷி இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தில் நடிகர் சுரேஷ்கோபியின் மகன் கோகுல் சுரேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம்.
அதேசமயம் விக்ரமின் மகன் துருவ்வும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்றும் தற்போது வரை அது சஸ்பென்ஸ் ஆக வைக்கப்பட்டுள்ளது என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. நிச்சயமாக இந்த படம் வெளியான பிறகு துருவ் விக்ரமின் கதாபாத்திரம் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் துருவ் விக்ரம் இந்த படத்தில் நடித்துள்ளதன் பின்னணியில் ஒரு சுவாரசியமான நிகழ்வும் சொல்லப்படுகிறது.
கடந்த 1993-ல் மலையாளத்தில் துருவம் என்கிற படம் வெளியானது. இயக்குனர் ஜோஷி இயக்கியிருந்த இந்த படத்தில் மம்முட்டி கதாநாயகனாகவும் சுரேஷ்கோபி மற்றும் விக்ரம் ஆகியோர் முக்கிய வேடங்களிலும் நடித்திருந்தனர். அதை நினைவூட்டும் விதமாக அந்த படத்தில் பங்கு பெற்ற சீனியர்களின் வாரிசுகளான ஜோஷியின் மகன் அபிலாஷ் ஜோஷி, மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான், சுரேஷ்கோபியின் மகன் கோகுல் சுரேஷ் மற்றும் விக்ரமின் மகன் துருவ் என நால்வரும் இந்த படத்தில் இணைந்துள்ளார்கள் என்று சொல்லப்படுகிறது.