பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
ஆதித்ய வர்மா, மகான் போன்ற படங்களில் நடித்த விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. கபடி வீரர் கணேசனின் வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும் அந்த படத்தில் நடிப்பதற்காக கபடி விளையாட்டு பயிற்சிகளை பெற்று வந்தார் துருவ் விக்ரம். ஆனால் மாரி செல்வராஜ், அப்பட வேலைகளை தள்ளி வைத்துவிட்டு வடிவேலு, உதயநிதி நடிப்பில் மாமன்னன் படத்தை இயக்கியவர், தற்போது அப்படம் திரைக்கு வந்துவிட்டதால், மீண்டும் துருவ் விக்ரம் நடிப்பில் இயக்கும் படத்தின் ஆரம்பகட்ட பணிகளை தொடங்கியுள்ளார்.
மேலும், இதையடுத்து துருவ் விக்ரம் நடிக்கும் நான்காவது படத்தை டாடா என்ற படத்தை இயக்கிய கணேஷ் பாபு இயக்கயிருப்பதாக ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைப்பதாக கூறப்பட்டது. இந்த தகவலை ஏ.ஆர்.ரஹ்மான் மறுத்துள்ளார். ‛உண்மையில்லை. தவறான தகவல்களை பகிர வேண்டாம். எனினும் துருவ் விக்ரம் நடிக்கும் இப்படம் வெற்றியடைய வாழ்த்துகள்' என பதிலளித்தார்.