மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
தற்போது 50 சதவிகிதத்திற்கும் மேல் ஹாரர் கலந்த த்ரில்லர் படங்கள் தயாராகின்றன. குறைந்த பட்ஜெட்டில் நிறைவான ஒரு ஹாரர் படத்தை எடுத்து விட முடியும் என்கிற நிலையே இதற்கு காரணம். இதனை கருத்தில் கொண்டு ஹாரர் படங்களை மட்டும் தயாரிப்பதற்காக 'நைட்ஷிப்ட் ஸ்டூடியோ' என்ற நிறுவனத்தை தொடங்கி உள்ளனர். தயாரிப்பாளர் ஒய் நாட் சசிகாந்த் மற்றும் தயாரிப்பாளரான சக்ரவர்த்தி ராமச்சந்திரா ஆகியோர் இணைந்து இதனை தொடங்கி உள்ளனர்.
இதுகுறித்து தயாரிப்பாளர் சசிகாந்த் கூறும்போது, "உள்நாட்டு ஹாரர் - த்ரில்லர் படங்களை உலகிற்கு எடுத்துச் செல்ல இது ஒரு அற்புதமான வாய்ப்பு. எனது ஒய் நாட் ஸ்டுடியோஸ் எப்போதுமே புது வகையான முயற்சிகளுக்கு வழி கொடுத்து வருகிறது, அதே சித்தாந்தத்தை கைப்பற்றி நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸின் முயற்சிகளும் அமையும்." என்றார்.