புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
கோலமாவு கோகிலா, டாக்டர், ஆகிய இரண்டு படங்களும் நெல்சனுக்கு ஹிட்டாக அமைந்த நிலையில், விஜய் நடிப்பில் இயக்கிய பீஸ்ட் படம் தோல்வியடைந்தது. என்றாலும் அதையடுத்து ரஜினி நடிப்பில் அவர் இயக்கி உள்ள ஜெயிலர் படம் ஹிட் அடித்துள்ளது. இதனால் நெல்சன் அடுத்து இயக்கும் படம் குறித்து எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், ரஜினி - விஜய் இருவரையும் இணைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்ற ஆசை தனக்கு இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
அதோடு, இதுவரை நான் இயக்கிய கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் ஆகிய நான்கு படங்களின் இரண்டாம் பாகங்களையும் இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளேன். அதை விரைவில் செயல்படுத்துவேன் என்றும் தெரிவித்துள்ளார் நெல்சன். மேலும், விஜய்- அஜித்தை இணைத்து ஒரு படம் இயக்குவேன் என்று நீண்ட காலமாகவே கூறி வருகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. இந்நிலையில் தற்போது ரஜினி, விஜய்யை இணைத்து ஒரு படம் இயக்குவேன் என்று நெல்சனும் கூறி இருக்கிறார். இது எந்த அளவுக்கு சாத்தியமாகப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.