ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
திரைப்பட எழுத்தாளர் அஜயன்பாலா, ஏ.எல்.விஜய்யிடம் உதவியாளராக பணியாற்றி விட்டு தற்போது ஒரு படத்தை இயக்குகிறார். இந்த படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இதில் 'கன்னி மாடம்' ஸ்ரீராம் கார்த்திக், நாயகனாக நடிக்கிறார். 'கோலிசோடா 2' கிரிஷா குருப், யோகி பாபு, முனீஷ்காந்த் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை அஜய் அர்ஜுன் புரொடக் ஷன்ஸ் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிக்கிறார். செழியன் ஒளிப்பதிவு செய்கிறார். சித்துகுமார் இசையமைக்கிறார்.
இந்த படத்தில்தான் நா.முத்துகுமாரின் கடைசி பாடல் இடம் பெறுகிறது. இதுகுறித்து அஜயன்பாலா கூறும்போது "சூழலியல் பின்னணியில் உருவாகும் காதல் கதை இது. இந்தப் பின்னணியில் தமிழில் உருவாகும் முதல் படம் இதுவாகத்தான் இருக்கும். நான் ஏற்கெனவே உருவாக்க இருந்த படத்துக்காக நா.முத்துக்குமார் ஒரு பாடல் எழுதி கொடுத்திருந்தார். அந்த பாடலை பத்திரமாக வைத்திருந்தேன். அந்த பாடல் இந்த படத்தின் கதைக்கும் பொருந்துவதால் இந்த படத்தில் அந்த பாடலை பயன்படுத்த இருக்கிறேன். அவருடைய கடைசி பாடலாக அது இருக்கும்" என்றார்.