எம்புரான், பஷூக்கா : தொடர்ந்து ஆக்ஷன் மோடுக்கு தயாராகும் மலையாளம் | இன்ஸ்டா பிரபலத்தை பிரபாஸின் ஜோடியாக்கியது ஏன்? : இயக்குனர் விளக்கம் | மீண்டும் ஒரு புரமோஷன் சர்ச்சை : இந்த முறை பெண் இயக்குனருக்கும் நடிகைக்கும் | பாவனா நடித்துள்ள ‛தி டோர்' படத்தின் டீசர் வெளியானது | அல்லு அர்ஜுன் - அட்லி இணையும் படத்தில் சர்வதேச நடிகைகளா? | 'விடாமுயற்சி' வசூலைக் கடந்த 'டிராகன்' | 7.47 கோடி ரூபாய் வாட்ச் அணியும் ஜுனியர் என்டிஆர் | தனுஷ் இல்லாமல் 'வட சென்னை 2': வெற்றிமாறன் முடிவு | 2025 அற்புதமான ஆண்டாக இருக்கும் : மாளவிகா மோகனன் | நடிகை சவுந்தர்யா மரணம் விபத்தல்ல... கொலை : மோகன்பாபுவை தொடர்புபடுத்தி சமூக ஆர்வலர் புகார் |
திரைப்பட எழுத்தாளர் அஜயன்பாலா, ஏ.எல்.விஜய்யிடம் உதவியாளராக பணியாற்றி விட்டு தற்போது ஒரு படத்தை இயக்குகிறார். இந்த படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இதில் 'கன்னி மாடம்' ஸ்ரீராம் கார்த்திக், நாயகனாக நடிக்கிறார். 'கோலிசோடா 2' கிரிஷா குருப், யோகி பாபு, முனீஷ்காந்த் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை அஜய் அர்ஜுன் புரொடக் ஷன்ஸ் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிக்கிறார். செழியன் ஒளிப்பதிவு செய்கிறார். சித்துகுமார் இசையமைக்கிறார்.
இந்த படத்தில்தான் நா.முத்துகுமாரின் கடைசி பாடல் இடம் பெறுகிறது. இதுகுறித்து அஜயன்பாலா கூறும்போது "சூழலியல் பின்னணியில் உருவாகும் காதல் கதை இது. இந்தப் பின்னணியில் தமிழில் உருவாகும் முதல் படம் இதுவாகத்தான் இருக்கும். நான் ஏற்கெனவே உருவாக்க இருந்த படத்துக்காக நா.முத்துக்குமார் ஒரு பாடல் எழுதி கொடுத்திருந்தார். அந்த பாடலை பத்திரமாக வைத்திருந்தேன். அந்த பாடல் இந்த படத்தின் கதைக்கும் பொருந்துவதால் இந்த படத்தில் அந்த பாடலை பயன்படுத்த இருக்கிறேன். அவருடைய கடைசி பாடலாக அது இருக்கும்" என்றார்.