மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ஜெயிலர் படம் வருகிற 10-ஆம் தேதி திரைக்கு வருகிறது. அதையடுத்து ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் ரஜினி. இந்த படத்தையடுத்து ஞானவேல் இயக்கும் தனது 170 வது படத்தில் நடிக்கப் போகிறார். ரஜினியுடன், அமிதாப்பச்சன், நானி, பகத்பாசில் என பலர் இப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில், தற்போது கூத்துப்பட்டறையை சார்ந்த பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கயிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த கதாபாத்திரங்களில் புதுமுகங்களை தான் நடிக்க வைக்க வேண்டும் என்று திட்டமிட்டிருந்த ஞானவேல், புதுமுகங்கள் அதிகப்படியான டேக் வாங்கினால் அது ரஜினியையும் கஷ்டப்படுத்தும். இதனால் ஏற்கனவே கூத்து பட்டறையில் பயிற்சி பெற்று பல படங்களில் நடித்த சிறந்த கலைஞர்களை இந்த படத்தில் ரஜினி உடன் முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடிக்க வைப்பதற்கு திட்டமிட்டுள்ளாராம்.