பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கத்தில் எஸ்.கே.எம் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் முதல் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் விஜய் ஆனந்தன் இயக்குகிறார். யாரிடமும் உதவியாளராக பணியாற்றாமல் சினிமாவைக் கற்று இயக்குநராக அறிமுகமாக உள்ளார்.
வட சென்னையை பின்னணியாக கொண்ட கேங்ஸ்டர் படமாக உருவாக உள்ள இப்படத்திற்கு 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு', 'போத்தனூர் தபால் நிலையம்', 'நட்சத்திரம் நகர்கிறது' ஆகிய படங்களுக்கு இசையமைத்த தென்மா இசையமைக்கிறார். ஆரி ஒளிப்பதிவு செய்கிறார். நேற்று படத்தின் துவக்க விழா நடந்தது. திரையுலகினர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.