துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
சினிமாவில் நடிக்க வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் இருக்கும். 90 சதவிகிதம் பேர் அந்த ஆசையை மனதுக்குள் பூட்டி வைத்து விடுவார்கள், சிலர் தானாக வாய்ப்பு வரும் என்று காத்திருப்பார்கள், சிலர் வாய்ப்பு தேடுவார்கள், சிலர் ஜெயிப்பார்கள், பலர் தோற்பார்கள்.
குறிப்பாக டாக்டர்களிடையே ஆக்டராகும் ஆசை அதிகமாகவே இருக்கிறது. ஏற்கெனவே பல டாக்டர்கள் சினிமாவில் நடித்து வரும் நேரத்தில் ஈரோட்டை சேர்ந்த இளம் டாக்டர் ஆதித் சுந்தரேஸ்வரரும் நடிகராகி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது ‛‛எங்கள் குடும்பம் விவசாய குடும்பம். எங்கள் தலைமுறையின் முதல் டாக்டர் நான் தான். மெரிட்டில் தேர்வாகி சென்னை மருத்துவ கல்லூரியில் படித்தேன். அப்போது உடன் படித்த மாணவர்கள் நீ சினிமாவில் நடிக்கலாம் என்று ஆசையை தூண்டினார்கள். இதனால் கல்லூரி நாடகங்களில் நடித்தேன். நடனம், நடிப்பு கற்றேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் சினிமாவில் வாய்ப்பு தேடினேன். வசனமே இல்லா அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்டாகவும் நடித்தேன்.
‛தூரிகையே ஓவியமானதே' என்ற குறும்படத்தில் நடித்தேன். அதன் மூலம் பல குறும்பட வாய்ப்புகள் கிடைத்தது. மிஷ்கின் உதவியாளர் மீனா குமாரி இயக்கிய 'பாசு பேபி' என்ற வெப் தொடரில் நடித்தேன். 'நேற்று நீ இன்று நான்' படத்தில் ஹீரோவாக நடித்தேன். தற்போது சேரன் இயக்கும் வெப் தொடரில் நடித்து வருகிறேன். அதோடு 'ஆயிரம்கால் மண்டபம்' என்ற படத்திலும் நடித்து வருகிறேன்'' என்றார்.