பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
டில்லியைச் சேர்ந்த தேவியானி ஷர்மா 'பானுமதி அண்ட் ராமகிருஷ்ணா' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு, ஷைத்தான் மற்றும் சேவ் தி டைகர்ஸ் தொடர்களில் நடித்தார். தற்போது சில தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். தமிழில் நடிக்கவும் பேச்சு நடந்து வருகிறது.
இதுகுறித்து அவர் கூறும்போது, "நான் தமிழ் சினிமாவை மிகவும் ரசித்து பார்ப்பேன். கலையும் கமர்ஷியலும் சரியான விகிதத்தில் இங்கு கலந்துள்ளது. எனக்கு தமிழ் சினிமாவில் எல்லோரையும் ரொம்பப் பிடிக்கும். இயக்குனர் விக்னேஷ் சிவன் படத்தில் பணியாற்ற வேண்டும்'' என்றார்.
தேவியானி ஷர்மா ஒரு மேடை நாடக கலைஞர் மற்றும் பாரம்பரிய நடனத்தை கற்றுத் தேர்ந்தவர் மற்றும் ஓவியர். சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் தேவியானி ஷர்மா, தானே ஓவியங்கள் வரைந்து அதனை ஆன்லைனில் விற்பனை செய்கிறார். இவரது ஓவியங்கள் பல லட்சங்களை தாண்டி விலை போகிறது என்கிறார்கள்.