மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
ராஜமவுலி இயக்கத்தில், பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா நடித்து பெரும் சாதனை படைத்த படம் 'பாகுபலி'. அப்படத்தின் தயாரிப்பாளர் ஷோபு யர்லகட்டா பதிவிட்ட டுவீட் ஒன்று தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
“வெற்றியை கவனத்துடன் கையாள வேண்டும். சமீபத்தில் வளரும் நடிகர் ஒருவரிடம் அறிமுக இயக்குனர் ஒரு கதையைச் சொல்லச் சென்ற போது அந்த நடிகர் குறைந்தபட்ச மரியாதையைக் கூடத் தரவில்லை. அவரது வாழ்க்கையை வளர்க்க இந்த குணம் உதவாது என்பதை அவர் விரைவில் புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
யார் அந்த நடிகர் என்று அவர் எந்தப் பெயரையும் குறிப்பிடவில்லை. தெலுங்கு திரையுலகத்தில் சமீப காலத்தில் சில வளரும் நடிகர்கள் குறிப்பிடத்தக்க வெற்றியைத் தந்துள்ளனர். அவர்களில் யாரை ஷோபு சொல்கிறார் என ரசிகர்கள் அவரவர் யூகத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
'பாகுபலி' தயாரிப்பாளரையே இப்படி கோவப்பட வைத்த அந்த நடிகர் யாராக இருக்கும் ?.