புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! | புஷ்பா 2 படத்தில் டேவிட் வார்னர்? | கலகலப்பு 3ம் பாகத்தில் மீண்டும் விமல்? | லப்பர் பந்து இயக்குனரின் அடுத்த படத்தை தயாரிக்கும் தனுஷ் பட தயாரிப்பாளர்! | மெய்யழகன் படத்துடன் இணைந்த சர்தார் 2! | நேருக்கு நேர் மோதும் அஜித், சூர்யா படங்கள்! | படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் |
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. மூன்று படங்கள் மட்டுமே இயக்கிய நெல்சன் திலீப்குமாருக்கு முதல் இரண்டு படங்களின் வெற்றி தான் இந்த ஜெயிலர் பட வாய்ப்பை பெற்றுத் தந்தது. ஆனால் அவரது மூன்றாவது படமான பீஸ்ட், ஜெயிலர் அறிவிப்புக்கு பின் வெளியாகி கடும் விமர்சனங்களை சந்தித்தது. ஆனாலும் ஜெயிலர் படத்தை இயக்கும் வாய்ப்பு அவரது கையை விட்டுப் போகவில்லை. படத்தையும் இயக்கி முடித்து விட்டார்.
இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசும்போது பீஸ்ட் படத்திற்கு சரியான வரவேற்பு இல்லை என்பதால் நெல்சன் திலீப்குமாரை மாற்றலாம் என பலரும் கூறினார்கள். ஆனாலும் அவர்தான் இயக்க வேண்டும் என உறுதியாக இருந்தேன். இந்த படத்தின் கதையை சொல்வதற்காக காலை 10 மணிக்கு வருமாறு நெல்சனுக்கு அப்பாயின்மென்ட் கொடுத்திருந்தேன். ஆனால் அவர் நான் நீண்ட நேரம் தூங்குபவன் என்பதால், 11.30 மணிக்கு வருகிறேன் என்று கூறினார். ஆனாலும் அவர் 12 மணிக்கு தான் எனது வீட்டிற்கு வந்தார். அதன்பிறகு படத்தின் ஒரு வரி கதையை கூறினார். பத்து நாட்கள் கழித்து வந்து முழு கதையையும் சொன்னார். ரொம்பவே பிடித்திருந்தது. படத்தை துவங்கி விட்டோம்' என்று கூறினார்.
அந்த வகையில் ரஜினியின் பட வாய்ப்பு கிடைப்பதற்கு உறுதியாவதற்கு முன்பே, பங்சுவாலிட்டி விசயத்தில் பெயர் போன ரஜினிக்கு அதிர்ச்சி அளித்துள்ளார் நெல்சன் திலீப் குமார்.