3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் |
நடிகர் மோகன்லால் தற்போது மலையாளத்தில் மலைக்கோட்டை வாலிபன் என்கிற படத்தில் நடித்து முடித்து விட்டார். லிஜோ ஜோஸ் பள்ளிசேரி என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து தற்போது பாலிவுட் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தெலுங்கில் தயாரிக்கும் விருஷபா என்கிற படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் மோகன்லால். இந்த படத்தை கன்னட இயக்குனரான நந்தா கிஷோர் என்பவர் இயக்குகிறார். ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் இந்த படம் தயாராகிறது.
இந்த படத்தில் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் நடிகை சிவரஞ்சனி தம்பதியின் மகன் ரோஷன் மேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை சிவரஞ்சனி தொண்ணூறுகளின் துவக்கத்தில் சின்ன மாப்ளே, காத்திருக்க நேரமில்லை, தலைவாசல் உள்ளிட்ட பல தமிழ்ப்படங்களில் நடித்தவர். தற்போது தனது மகன் அறிமுகமாகும் படம் என்பதால் சமீபத்தில் துவங்கிய விருஷபா படத்தின் முதல்நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை சிவரஞ்சனி சென்டிமென்டாக படப்பிடிப்பை கிளாப் அடித்து துவங்கி வைத்தார்.