‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

சமீபத்தில் 2022ம் வருடத்திற்கான 53 வது கேரளா அரசு திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் கடந்த வருடம் வெளியான நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக நடிகர் மம்முட்டிக்கு சிறந்த நடிகர் என்கிற கேரள அரசு விருது அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை இயக்குனர் லிஜோ ஜோஸ் பள்ளிசேரி என்பவர் இயக்கியிருந்தார். இதை தொடர்ந்து மம்முட்டிக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில் நடிகை பிராச்சி டெஹ்லான் என்பவர் மம்முட்டியை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
டில்லியை பூர்வீகமாகக் கொண்ட பிராச்சி டெஹ்லான் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் வெளியான மாமாங்கம் என்கிற வரலாற்று படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த நிலையில் தற்போது கேரளாவுக்கு வருகை தந்துள்ள பிராச்சி டெஹ்லான் மம்முட்டியை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “நான்கு வருடங்களுக்குப் பிறகு ஒரு ரசிகையாக நான் மாறிய தருணம் இது. கொச்சியில் இருக்கும் நிலையில் மம்முட்டியை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் சொல்லாவிட்டால் எப்படி ?. அவருடைய புன்னகை சுற்றிலும் இருப்பவர்களை வீழ்த்தி விடும். நீங்கள் அவரை பிரமித்து பார்ப்பீர்கள். நான் மம்முக்காவிடம் ஒரு ஹக் கேட்டேன்.. கேட்டது எனக்கு கிடைத்தது” என்று தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.




